பிரதமருடன் ஐ.தே.கட்சியினர் மீளவும் பேச்சுவார்த்தை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 6 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மீளவும் பேச்சுவார்த்தை நடாத்தி, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக குறித்த கட்சியின் தவிசாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டில் உள்ள அரசியல் நிலவரங்களை வைத்து மக்கள் ஆதரவு குறித்து ஆய்வு செய்து முடிவுக்கு வருமாறு தாம் பிரதமரைக் கோரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.