பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் கர்நாடகாவின் கொள்ளுர் – சிறி மூகாம்பிகை ஆலயத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதமர் எதிர்வரும் 23ம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ள உலக மின்வெளி மாநாடு ஒன்றிலும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.