பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(28) அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவிருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரஞ்சித் மதுத்துமபண்டார தெரிவித்தார்.