சமுர்த்தி நிவாரண பத்திரங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை(15) நடைபெறவுள்ளது.
மாத்தளை எட்வர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ.ஹரிசன் மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“2030ம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கை” என்ற தொனி பொருளின் கீழ் சமூக வலுவூட்டல் தொடர்பான சமகால அரசாங்கத்தின் கீழ் புதிய பரிந்துரைக்கு அமைவாக சமுர்த்தி உரித்துக்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.