பிரதமர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு…

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்குமான சந்திப்பு ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரி மாளிகையில் நடைபெறவுள்ள குறித்த இந்த கூட்டத்திக்கு அனைத்து மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆழமாக ஆராயப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.