பிரதமர் நாடு திரும்பினார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து இன்று(04) மீளவும் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள எழில்மிகு தீவான இலங்கை, அயல் நாடுகளுடன் மாத்திரமல்லாமல் சர்வதேச நாடுகளுடனும் அணிசேரா கொள்கையின் அடிப்படையில் இராஜதந்திர உறவுகளைப் பேணி வருகின்றது. அந்த வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.