பிரதமர் பதவியினை ஏற்கத் தயார்.. அதற்கு காலம் உண்டு.. – ராஜித

பிரதமர் பதவியினை தான் வகிக்க இன்னும் காலம் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று(28) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் சிலருடன் நேற்று(27) சுகாதார அமைச்சில் தான் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.