பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு ஒன்று நேற்று(07) மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் இருக்கின்ற குறைபாடுகள் சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர்களால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.
(rizmira)