பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று(01) காலை, ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொருளாதார சஞ்சிகையொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, ‘2017க்கான உலகு’ எனும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே, பிரதமர், ஹொங்கொங் பயணித்துள்ளதாக, அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.