பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்..

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியினை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

“..மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகளின் ஊடாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்..” என ஜனக வக்கும்புரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)