பிரதம நீதியரசருக்கு அனுப்பியதாக கூறப்படும் கடிதம் தொடர்பில் CID இல் முறைப்பாடு…

பிரதம நீதியரசர் நளின் ஜயலத் பெரேராவுக்கு சபாநாயகரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படும் போலியான செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (21) முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. 

சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தால் குறித்த இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.