பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரத்தினால் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.