இலங்கைப் பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனந்த குமாரசிறி 97 வாக்குகளை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டதாக சபாநாகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.
பாராளுமன்றத்திற்கான பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று(05) பிற்பகல் இடம்பெற்றது.