ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிபாரிசு செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜனை பிரதி சபாநாயகர் பதிவிக்கு ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளமை தொடர்பான தகவலை, இன்று(22) கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியா தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.