பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கொழும்பு – வடக்கிற்கு..

பொலிஸ் சட்டப்பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்படுகின்ற பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன’வை கொழும்பு – வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆணைக்குழு முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் மூலம் குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்ட நிலையில், நேற்று(07) குறித்த ஆணைக்குழுவால் அஜித் ரோஹன வை கொழும்பு வடக்கிற்கு பொறுப்பாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய அஜித் ரோஹன ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)