பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்க்கவும்..

(FASTNEWS| COLOMBO) – தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இராணுவ பாதுகாப்பு பிரிவினால் முன்னெடுக்கப்படும் சோதனைகளை/ சுற்றிவளைப்புகள் தொடர்பிலான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு இராணுவம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நாட்களில் அநேகமானோர் தமது பிரதேசத்தில் நடக்கும் சுற்றிவளைப்புகளை புகைப்படங்களாக காணொளிகளாக சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இது தொடர்பில் நாம் கவனித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.