பிரபல நகரங்களை இணைத்து அதிவேக வலையமைப்பு ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மன்னார், குருநாகல், கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய நகரங்களை தொடர்புபடுத்தியே மேற்குறித்த இந்த அதிவேக வலையமைப்பு அமைக்கப்படவுள்ளது.
நேற்று முன்தினம், இந்தியாவின் போக்குவரத்து அமைச்சர் நித்தின் கட்காரியை சந்தித்த போது ரணில் விக்கிரமசிங்க, இந்த தகவலை வெளியிட்டார்.
இந்நிலையில் குறித்து வீதி வலையமைப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா, தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் என்று இந்திய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.