பிரபல சினிமா பாடகரின் மகன் கைது…

வாகன விபத்தில் பிரபல சினிமா பாடகர் உதித் நாராயணனின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திப்பட திரையுலகில் பிரபல சினிமா பாடகராக இருந்து வருபவர் உதித் நாராயணனின் மகன் ஆதித்யா. இவர் காரில் சென்றுகொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற முச்சக்கர வண்டி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் முச்சக்கர வண்டி பின்புறம் பலத்த சேதமடைந்தது. மேலும் முச்சக்கர வண்டியின் சாரதி ராஜ்குமார்(வயது64) மற்றும் பெண் பயணி சுரேகா(32) ஆகியோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஆதித்யாவை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ஆதித்யாவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் குடிபோதையில் காரை ஓட்டினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.