பிரபல நடிகை தீபானி சில்வா பிணையில் விடுதலை…

பண்டாரகம பகுதியில் இன்று (28) அதிகாலை இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தீபானி சில்வாவிற்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

200,000 இலட்சம் ரூபா சரீர பிணையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை காயமடைந்த சிறுமியின் மருத்துவ செலவிற்காக 25,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த 10 வயதுடைய சிறுமி தொடர்ந்தும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.