‘கபாலி’ படத்தை தொடர்ந்து தற்போது காலா படத்தில் பணியாற்றி வருகிறார் பிரபல நட்சத்திர நடிகர் ரஜினி காந்த்.
அரசியல் கட்சி துவங்கும் பணிகள் ஒருபுறம் நடக்க தற்போது குறித்த இந்த படத்திற்கு டப்பிங் பேசி வருகிறார் அவர்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
படத்தின் தலைப்பில் ‘காலா’ என்ற பெயரை பயன்படுத்த கூடாது என மனுதாரர் கேட்டிருப்பது பற்றி விளக்கமளிக்க ரஜினி, இயக்குநர் ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் தென்னிந்திய வர்த்தக சபைக்கு இவ்வாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
#g-reeshma