தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பிரபல பாடசாலைகளுக்கு உள்வாங்கும் வெட்டுப் புள்ளிகள் இவ்வாரத்துக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாணவர்களின் புள்ளிகள் கணனியில் பதியும் நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பிரபல பாடசாலைகளுக்கு பிள்ளைகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.