பிரபாகரனால் சிக்கலில் மாட்டியுள்ள விஜயகாந்த்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து அதில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புகைப்படத்தை ஒட்டியமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

கடந்த 25ஆம் திகதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் போஸ்டர், பதாகைகள் என ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில், ஆரணி தே.மு.தி.க அணியினர் வைத்த பதாதை ஒன்று தற்போது உலகம் முழுவது பாரிய சர்சையை தோற்றுவித்துள்ளது.

விஜயகாந்த் பிறந்த நாளுக்காக வைக்கப்பட்ட பதாதை ஒன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடையில் தலைவர் பிரபாகரன் இருக்கும் புகைப்படம் ஒன்றில் பிரபாகரன் அவர்களின் முகத்தை நீக்கிவிட்டு மார்பிங் செய்யப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படம் ஊடகங்களில் வெளியான நிலையில், தற்போது உலக தமிழர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இயக்குநர் சேரன், ஈழத் தமிழர்களை விமர்சித்தது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தற்போது விஜயகாந்தும் வம்பில் மாட்டியுள்ளார்.