பிரித்தானிய அமைச்சரின் இலங்கைக்கான பயணம் இரத்து..

பிரித்தானிய அமைச்சர் அலோக் சர்மா இலங்கைக்கான பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலோக் சர்மா இந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்ய உத்தேசித்திருந்தார். எனினும் ஜூன் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து இவ்வாறு இலங்கை பயணத்தை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் பல முக்கிய பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)