(FASTGOSSIP | COLOMBO) – உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்து சென்றிருக்கும் அணியின் தலைவர்கள், பிரித்தானிய ராணி மற்றும் இளவரசர் ஹரியை பக்கிங்காம் அரண்மனையில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
10 அணிகள் மோதும் உலகக்கிண்ணம் தொடரானது இன்று 30ம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.இங்கிலாந்தில் நடைபெற உள்ள குறித்த தொடரின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
போட்டிக்கு முன்னதாக அனைத்து அணியின் தலைவர்கள் பிரித்தானிய ராணி மற்றும் இளவரசர் ஹரி ஆகியோரை பக்கிங்காம் அரண்மனையில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



