டெங்கு காய்ச்சல் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ஒருவகை நுளம்பினால் பரவுகிறது.
இந்நிலையில் மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சல் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரேசிலினை கடுமையாக தாக்கியுள்ளது.
இங்கு டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 700 பேர் பலியாகி உள்ளனர். அங்கு சாவ்பாலோ மாகாணத்தில்தான் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 1990–ம் ஆண்டு முதல் இங்கு டெங்கு காய்ச்சலின் பாதிப்பு இருப்பதாக ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மெக்சிகோ அரசு தீவிரமாக உள்ளது.