பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2003 – 2011ஆம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் இலஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் லுலாவுக்கு ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீட்டை அன்பளிப்பாக அளித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.