பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்..

நாடளாவிய ரீதியில் அதிகளவான வெப்ப காலநிலை நிலவி வரும் நிலையில் மழை பெய்வது தொடர்பில் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி இன்று(02) பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமத்திய, வடமேல், ஊவா ஆகிய பிரதேசங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த நிலையம் எதிர்வை வெளியிட்டுள்ளது.

(rizmira)