பிலிப்பைன்ஸ் மிண்டானோ தீவில் இன்று(29) சுமார் 5.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் தென்கிழக்கே சுமார் 302 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியே சுமார் 54 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று(29) ஏற்பட்ட இந்நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.