பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் இன்று(10) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஜோலோ தீவு மற்றும் தபியாவான் பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

செலபஸ் கடல் பகுதியில் பூமியின் அடியில் சுமார் 617 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாத நிலையில் இந்நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.