பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நுழைந்தது…

ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நுழையும் வாய்ப்பினை பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டெல்லி டேர்டெவில்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி டேர்டெவில்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.

இறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

#Rishma