முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 19.5.2016ம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தில் குறித்த இந்த வழக்கு இன்றையதினம் (28) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வழக்கை எதிர்வரும் 19.5.2016ம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி ஒத்திவைத்தார்.
மேலும், குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.