தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பான விசாரணை இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்திரகாந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையினை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி. சந்திராணி விஸ்வலிங்கம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரை பிணை மனு மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.