பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்..

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் நாளை(08) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க, இன்று(07) மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த இந்த படுகொலை தொடர்பாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

E- (reeshma)