UPDATE – 09:41 AM
பீ.பீ.சி சிங்களப் பிரிவின் ஊடகவியலாளர் அசாம் அமீன் இடம் வாக்குமூலம் ஒன்றினை பெற குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று(10) அழைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வாக்குமூலம் வழங்க வேண்டிய தேவை இல்லை என பொலிஸ் இனால் கடிதம் மற்றும் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

UPDATE – 08:15 AM
பீ.பீ.சி சிங்களப் பிரிவின் ஊடகவியலாளர் அசாம் அமீனுக்கு CID அழைப்பு…
கடந்த பாராளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்தினை ஜனாதிபதியின் டுவிட்டர் செய்தியில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு பதில் டுவிட்டர் செய்தியை அனுப்பிய பீ.பீ.சி சிங்களப் பிரிவின் ஊடகவியலாளர் அசாம் அமீன் இடம் வாக்குமூலம் ஒன்றினை பெற குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இன்று(10) காலை 10.00 மணிக்கு வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பணிவிடை மற்றும் ஊடகவியலாளரின் பதில் டுவிட்டர்;
