ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் பீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.
புதிய புகையிரத கட்டண திருத்தத்தின் அடிப்படையில் 15 % ஆல் புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.