புகையிரத சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரத்து…

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேற்கொள்ள தீர்மானித்திருந்த புகையிரத சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியுடன் நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.