புகையிரத சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை சோதிக்க CID களத்தில்…

புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு, நேற்று(29) மாலை முதல் முன்னெடுத்து வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த குழுவினர், ரயில் எஞ்சின் மற்றும் பெட்டிகளுக்குச் சேதம் விளைவித்துள்ளனர் என, ரயில்வே திணைக்களம், குற்றப்புலனாய்வு பிரிவிடம் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்துள்ளது.

சம்பள உயர்வு உள்ளிட்ட 03 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(29) முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழு முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.