(FASTNEWS|COLOMBO) சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத கண்காணிப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் மற்றும் புகையிரத கண்காணிப்பு முகாமைத்துவ ஒன்றியம் ஆகியன இணைந்து முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பைக் கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.