புகையிரத தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது..

புகையிரத தொழிற்சங்கத்தினால் இன்று(20) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.

பிரதமரின் செயலாளருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி , நாளை(21) பிரச்சினையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் வழங்கிய வாக்குறுதியின் படி இவ்வாறு தமது தொழிற்சங்க நடவடிக்கையினை கைவிட தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

(rizmira)