புகையிலைக்கான வரியை 90% ஆக அதிகரிக்க அரசு நடவடிக்கை

புகையிலைக்கான வரியை 90 வீதமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளது.