(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையிலான 9 பேர் அடங்கிய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த குழுவில் 2 தமிழ் பேசும் உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர்கள் (தலைவர்)
ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவர்கள்
ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா அவர்கள்
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள்
பேராசிரியர் திருமதி நசீமா ஹமூர்தீன் அவர்கள்
கலாநிதி எ.சர்வேஸ்வரன் அவர்கள்
ஜனாதிபதி சட்டத்தரணி சமன்த ரத்வத்தே அவர்கள்
பேராசிரியர் வசன்த செனவிரத்ண அவர்கள்
பேராசிரியல் ஜி.எல்.பீரீஸ் அவர்கள்