புதிய அரசியல் அமைப்பு குறித்த குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள்..

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24 ஆவது நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு பின்னர் தீர்வுகள் எட்டப்படும்.

இதற்கு அனைத்து தரப்பினரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)