புதிய அரசியல் கட்சி அமைக்கப்படமாட்டாது!– பஷில் ராஜபக்ச

புதிய அரசியல் கட்சி தற்போதைக்கு அமைக்கப்படமாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷ  தெரிவித்துள்ளார்.

தனித்தனியாக இயங்கி வரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பொதுவான ஓர் எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவதே எதிர்க்கட்சிகளின் தலைவர்களது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியான ஒர் எதிர்க்கட்சியை அமைப்பதனை விடவும், ஒரே பாதையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பயணிக்க செய்வதே நோக்கமாகும் எனவும் புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு முன்னதாக மேலும் பல்வேறு கருமங்களை ஆற்ற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவான எதிர்க்கட்சியொன்றை அமைக்கும் பணியில் தமது பங்களிப்பு மிகவும் சொற்பளவிலானது என பஷில் ராஜபக்r குறிப்பிட்டார்.