புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின் கீழ் தற்போது 335 ஆக உள்ள உள்ளூராட்சி சபைகள் 336 ஆக அதிகரிக்கப்பட உள்ளன. மேலும் , பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை மற்றும் மாகாணசபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். இதனடிப்படையில் பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை 4,486இல் இருந்து 8,825ஆக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் , உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2200ஆக இருக்குமாறு சட்டத்தில் ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான உக்ரைனுடனான தூதரக தொடர்புகளை முறித்து கொள்வோம் என ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார். 1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல…
கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட விஜயமாக நாளை(31) ஜப்பான் செல்லவுள்ளதாக ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 10 நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், ஜப்பானிலுள்ள சில பௌத்த…