8வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும் என்று பாராளுமன்ற செயலாளர் தம்மிக தஸநாயக்க தெரிவித்தார்.
அதன்படி பாராளுமன்றிற்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களும் இன்று காலை 9.25 க்கு அவைக்குள் பிரவேசிக்கின்றனர்.
பாராளுமன்றைக் கூட்டுமாறு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை பாராளுமன்ற செயலாளரினால் வாசிக்கப்படும்.
அதன் பின்னர் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படுவார்.
அதன்படி புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியினால் தெரிவு செய்யப்பட இருப்பதுடன், பிரதி சபாநாயகர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளார்