புதிய பிரதமருக்கு பாராளுமன்றில் இருக்கையினை ஒதுக்க நடவடிக்கை…

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது, பிரதமருக்குரிய இருக்கையினை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக சபாநயாகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அது, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் என வர்த்தமானி அறிவித்தலில் அறிவித்ததற்கு அமையவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினால் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.