(FASTNEWS | COLOMBO) – இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(29) ஜனாதிபதி செயலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.