புதிய வீதி ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க இன்று முதல் கால அவகாசம்

(FASTNEWS|COLOMBO) புதிய நகர ஒழுங்கை சட்டத்தை கடைப்பிடிக்க சாரதிகளுக்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பேச்சாளரும், பொலிஸ் அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று(27) முதல் குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போக்குரவத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்காகவே, குறித்த இந்த புதிய நகர ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.