புதையலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட 04 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) – மொனராகலை – மரகலகந்த வனப்பகுதியில் புதையலை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் நேற்று(16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில், பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை மற்றும் கொட்டியாகல பகுதிகளை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.