புனித சிவனொலிபாத மலை யாத்திரையை முன்னிட்டு யாத்திரிகளின வசதிகருதி மோஹினி நீர் வீழ்ச்சியிலிருந்து நல்லதண்ணி வரையிலான பாதை விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வூட் வீதி அபிவிருத்திப்பிரிவினால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இம்மாதம் 22ஆம் திகதி இவ்வருடத்திற்கான புனித சிவனொலிபாத மலை யாத்திரை ஆரம்பமாகவுள்ளது.